நட்சத்திரங்கள்
மழையாக உதிரும்
இந்நாளில்
உன்
வருகையைக் கொண்டாடுகிறேன்.
இந்நகரின்
அடர் மலர்களிருந்து
உன்
பாதைக்கான நிறங்களை
முடிவு செய்கிறேன்.
முகம் தெரியா
பறவையின்
மென்னொலியில்
உனக்கான
பாடலை
இசைக்கச் செய்து
இன்று உலகிற்கு
அறிவிக்கிறேன் -
தீராப்பிரியங்களில்
உறைந்து கிடக்கும்
என்
தீராத சொற்கள்
உனக்கானவை
என.
--
வா.மணிகண்டன்.
www.pesalaam.blogspot.com
[Non-text portions of this message have been removed]